என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
சுவாமி- அம்பாள் ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளிய காட்சி.
ராமேசுவரம் கோவிலில் ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளிய சுவாமி, அம்பாள்
By
மாலை மலர்24 Feb 2022 5:02 AM GMT (Updated: 24 Feb 2022 5:02 AM GMT)

மாசி மகா சிவராத்திரி விழாவையொட்டி ராமேசுவரம் கோவிலில் சுவாமி- அம்பாள் ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளியதால் கோவில் நடை மூடப்பட்டது.
ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 3-வது நாளான நேற்று காலை 5.39 மணி அளவில் சாமி-அம்பாள் கோவிலில் இருந்து தங்க கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் ரதவீதிகளில் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைதொடர்ந்து காலை 8 மணிக்கு சாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் கோவிலிலிருந்து எழுந்தருளி ரதவீதி சாலை, நடுத்தெரு, திட்டக்குடி சவுந்தரி அம்மன் கோவில் தெரு வழியாக கெந்தமாதன பர்வதத்தில் உள்ள ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர்.
இதைதொடர்ந்து அங்கு மாலை 6 மணிக்கு சாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு கோவிலுக்கு வந்தனர். பின்னர் பள்ளியறை பூஜை நடைபெற்று கோவில் நடையானது உடனடியாக மூடப்பட்டது.
சுவாமி, அம்பாள் ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளியதால் நேற்று காலை 8 மணி முதல் இரவு வரையிலும் பக்தர்கள் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும், தரிசனம் செய்யும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல் திருவிழாவின் 4-வது நாளான இன்று இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 9-வது நாள் திருநாளான மார்ச் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று சாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
இதைதொடர்ந்து காலை 8 மணிக்கு சாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் கோவிலிலிருந்து எழுந்தருளி ரதவீதி சாலை, நடுத்தெரு, திட்டக்குடி சவுந்தரி அம்மன் கோவில் தெரு வழியாக கெந்தமாதன பர்வதத்தில் உள்ள ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர்.
இதைதொடர்ந்து அங்கு மாலை 6 மணிக்கு சாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு கோவிலுக்கு வந்தனர். பின்னர் பள்ளியறை பூஜை நடைபெற்று கோவில் நடையானது உடனடியாக மூடப்பட்டது.
சுவாமி, அம்பாள் ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளியதால் நேற்று காலை 8 மணி முதல் இரவு வரையிலும் பக்தர்கள் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும், தரிசனம் செய்யும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல் திருவிழாவின் 4-வது நாளான இன்று இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 9-வது நாள் திருநாளான மார்ச் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று சாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
