என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் தெப்போற்சவம்
    X
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் தெப்போற்சவம்

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் தெப்போற்சவம்

    ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி உற்சவ மூர்த்திக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் தெப்போற்சவவிழா நடந்தது. அதன் ஒரு பகுதியாக ஆறாம் நாளான நேற்று மாலை ஸ்ரீகோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோவில் வளாகத்தில் திருச்சி வாகனத்தில் காட்சி தந்தார்.

    கொரோனா பரவலைத் தொடர்ந்து, புஷ்கரிணியில் இல்லாமல் கோவிலில் தனிமையில் நடந்தது. காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    இதில் பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    Next Story
    ×