search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காரமடை அரங்கநாதர் கோவில்
    X
    காரமடை அரங்கநாதர் கோவில்

    காரமடை அரங்கநாதர் கோவில் திருவிழாவில் பங்கேற்க வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி கோவில் மாசிமக தேர்த்திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மற்றும் 18-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
    கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி கோவில் மாசிமக தேர்த்திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மற்றும் 18-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக தேர்த்திருவிழாவில் பங்கேற்க வெளி மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    எனவே உள்ளூர் மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி திருவிழாவில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×