என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
கோனியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
Byமாலை மலர்15 Feb 2022 4:22 AM GMT (Updated: 15 Feb 2022 4:22 AM GMT)
கோவையில் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் மார்ச் 2-ந்தேதி நடக்கிறது.
கோவையின் காவல் தெய்வமாக கோனியம்மன் பக்தர்களால் போற்றப்படுகிறார். இந்த கோவிலில் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழாவில் லட்ச கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழாவையொட்டி நேற்று கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக முகூர்த்தகால் கோவில் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ராஜவீதி தேர்நிலை திடலில் உள்ள தேர் முன்பாக சிறப்பு பூஜையுடன், கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி, தக்கார் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடப்பட்டது.
திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் மார்ச் 2-ந்தேதி நடக்கிறது. தேர்த்திருவிழா அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது.
இதனால் கோவிலுக்கு முககவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கோவில் வளாகத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் கோவில் நுழைவு வாயிலில் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழாவையொட்டி நேற்று கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக முகூர்த்தகால் கோவில் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ராஜவீதி தேர்நிலை திடலில் உள்ள தேர் முன்பாக சிறப்பு பூஜையுடன், கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி, தக்கார் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடப்பட்டது.
திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் மார்ச் 2-ந்தேதி நடக்கிறது. தேர்த்திருவிழா அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது.
இதனால் கோவிலுக்கு முககவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கோவில் வளாகத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் கோவில் நுழைவு வாயிலில் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X