என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்8 Feb 2022 4:31 AM GMT (Updated: 8 Feb 2022 4:31 AM GMT)
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டு தோறும் மாசித் திருவிழா 11 நாட்கள் ஒவ்வொரு சமுதாயத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் மாசித் திருவிழா 11 நாட்கள் ஒவ்வொரு சமுதாயத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது. கொடியேற்றத்தையொட்டி பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்தவுடன் மதியம் 12 மணிக்கு பாலாபிஷேகம், உச்சிகால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. பின்னர் இசை கச்சேரி நடைபெற்றது. முதல் நாள் திருவிழா பாவூர்சத்திரம் காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது. கொடியேற்றத்தையொட்டி பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்தவுடன் மதியம் 12 மணிக்கு பாலாபிஷேகம், உச்சிகால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. பின்னர் இசை கச்சேரி நடைபெற்றது. முதல் நாள் திருவிழா பாவூர்சத்திரம் காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X