
விழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலையில் அய்யாவுக்கு பணிவிடை, காலையில் உகப்பெருக்கு, பால்தர்மம், தாமிரபரணி ஆற்றில் இருந்து பதம் எடுத்து வருதல், சந்தனகுடம் எடுத்து நிழல்தாங்கலை வலம் வந்து அய்யாவுக்கு நேமித்தல் நடந்தது.மதியம் உச்சிப்படிப்பு, சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, உகப்பெருக்கு நிகழ்ச்சி, இரவில் பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.