என் மலர்tooltip icon

    வழிபாடு

    கும்பாபிஷேகம் நடைபெற்றதையும், அதில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியையும் படத்தில் காணலாம்.
    X
    கும்பாபிஷேகம் நடைபெற்றதையும், அதில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியையும் படத்தில் காணலாம்.

    விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    டலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்றது.

    பஞ்ச பூதங்களை மையமாக கொண்டு பல்வேறு சிறப்புகளை விளக்கும் இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றது.

    பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடந்தது.

    தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, காலை 8 மணியளவில் கோவில் மூலவர், ராஜ கோபுரங்கள், பரிவார தெய்வங்கள், கொடி மரம் என அனைத்து கோபுர கலசத்திற்கும் ஒரே நேரத்தில் புனித ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மூல மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    இதற்கிடையே கும்பாபிஷேகம் நடைபெற்றவுடன் மலர் தூவுவதற்காக கொண்டு வரப்பட்ட ஹெலிகாப்டர் வானுயர பறந்து கோவிலை 3 முறை வலம் வந்தது. தொடர்ந்து 5 கோபுரங்கள் மற்றும் விமானங்கள் மீதும், 4 கோட்டை வீதிகள், விருத்தாசலம் மணிமுக்தாறு, பாலக்கரை ஆகிய இடங்களில் வானில் இருந்தவாறு கும்பாபிஷேகத்தை தரிசித்த பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. மேலும் நவீன எந்திரங்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×