என் மலர்
வழிபாடு

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தேவார தமிழ்ப்பதிகம் பாடி திருக்கதவு திறக்கும் நிகழ்ச்சி
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தேவார தமிழ்ப்பதிகம் பாடி திருக்கதவு திறக்கும் நிகழ்ச்சி
ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக பெருவிழாவின்போது, தமிழ்ப் பதிகம் பாடி திருக்கதவு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரும் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடியதால் கதவு மீண்டும் திறந்ததாகவும் இதில் அப்பர் சுவாமிகள் பாடலில் கதவைத் திறக்கவும், சம்பந்தர் பாடலில் கதவை மீண்டும் திருக்காப்பு செய்ததாகவும் ஐதீகம்.
இதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக பெருவிழாவின்போது, தமிழ்ப் பதிகம் பாடி திருக்கதவு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தமிழ்ப்பதிகம் பாடி ததவு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது ஓதுவா மூர்த்திகளான முத்துக்குமாரசுவாமி, பரஞ்ஜோதி தேசிகர் கொண்ட குழுவினர் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட திருக்கதவு திறக்கப்பட்டடு மணவாள சுவாமிக்கு தீபாரதரனை காண்பிக்கப்பட்டது.
இதில் கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், யாழ்ப்பானம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி குடும்பத்தினர், ஸ்தலத்தார் கயிலை மணி வேதரத்னம், நகராட்சி பொறியாளர் மோகன் உள்பட ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக பெருவிழாவின்போது, தமிழ்ப் பதிகம் பாடி திருக்கதவு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தமிழ்ப்பதிகம் பாடி ததவு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது ஓதுவா மூர்த்திகளான முத்துக்குமாரசுவாமி, பரஞ்ஜோதி தேசிகர் கொண்ட குழுவினர் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட திருக்கதவு திறக்கப்பட்டடு மணவாள சுவாமிக்கு தீபாரதரனை காண்பிக்கப்பட்டது.
இதில் கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், யாழ்ப்பானம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி குடும்பத்தினர், ஸ்தலத்தார் கயிலை மணி வேதரத்னம், நகராட்சி பொறியாளர் மோகன் உள்பட ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story






