என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் நிறைவு
Byமாலை மலர்28 Jan 2022 5:53 AM GMT (Updated: 28 Jan 2022 5:53 AM GMT)
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் மகாபூர்ணாஹுதியுடன் நிறைவடைந்தது. யாக நிகழ்ச்சிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் ஏகாந்தமாக நடந்து முடிந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதியில் இருந்து நேற்று வரை 7 நாட்கள் ஸ்ரீயாகம் நடந்தது. இந்த ஸ்ரீயாகம் உலக அமைதிக்காகவும், உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும், நாடு செழிக்க வேண்டும், என்பதற்காகவும் நடத்தப்பட்டது.ஸ்ரீயாகத்தின் நிறைவு நாளான நேற்று மகாபூர்ணாஹுதியுடன் நிறைவடைந்தது. யாக நிகழ்ச்சிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் அர்ச்சகர் வேம்பள்ளி சீனிவாசன் தலைமையில் ஏகாந்தமாக நடந்து முடிந்தது.
நேற்று காலை 6.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை ஹோமம், மஹா பிரயச்சித்த ஹோமம், மகாசாந்தி ஹோமம், காலை 8.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை மகாபூர்ணாஹுதி, அபிஷேகம் ஆகியவை நடந்தது.ஸ்ரீயாகத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று முடித்து வைத்தார். அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் போகலா அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
நேற்று காலை 6.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை ஹோமம், மஹா பிரயச்சித்த ஹோமம், மகாசாந்தி ஹோமம், காலை 8.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை மகாபூர்ணாஹுதி, அபிஷேகம் ஆகியவை நடந்தது.ஸ்ரீயாகத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று முடித்து வைத்தார். அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் போகலா அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X