என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
நெல்லையப்பர் கோவில் தைப்பூச தெப்பத் திருவிழா நடந்தபோது எடுத்த படம்.
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா தெப்ப உற்சவம்
By
மாலை மலர்21 Jan 2022 8:58 AM GMT (Updated: 21 Jan 2022 8:58 AM GMT)

நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை இருவேளையிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்தது. இந்த நிலையில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததை தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் உடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தது.
இந்த நிலையில் தெப்பத்திருவிழா டவுன் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் சொக்கப்பனை முக்கு அருகில் தெப்பக்குளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் தெப்பகுளம் அருகே அமைந்துள்ள மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி தெப்பக்குளத்தில் 11 முறை வலம் வந்தனர். 11 முறை வலம் வரும் போதும் ஒவ்வொரு முறையும் மங்கல இசை, வேத மந்திரம், பதிகம் உள்ளிட்டவைகள் பாடப்பட்டது. இதில் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்தது. இந்த நிலையில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததை தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் உடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தது.
இந்த நிலையில் தெப்பத்திருவிழா டவுன் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் சொக்கப்பனை முக்கு அருகில் தெப்பக்குளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் தெப்பகுளம் அருகே அமைந்துள்ள மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி தெப்பக்குளத்தில் 11 முறை வலம் வந்தனர். 11 முறை வலம் வரும் போதும் ஒவ்வொரு முறையும் மங்கல இசை, வேத மந்திரம், பதிகம் உள்ளிட்டவைகள் பாடப்பட்டது. இதில் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
