search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி
    X
    நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி

    நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி

    நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவின் 4-வது நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான ‘நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி’ நடந்தது. இதற்கு ஒரு புராண வரலாறு உண்டு.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது.

    விழாவின் 4-வது நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான ‘நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி’ நடந்தது. இதற்கு ஒரு புராண வரலாறு உண்டு. அதாவது, வேதபட்டர் என்பவர் சுவாமிக்கு நெய்வேத்தியம் படைக்க யாசகம் பெற்ற நெல்மணிகளை காயவைத்து விட்டு தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது கடும் மழை பெய்தது. சுவாமிக்கு நெய்வேத்தியம் படைக்க காயவைத்த நெல்மணிகள் மழையில் நனைந்து விடுமே என்று வேதனையுடன் வேதபட்டர் வந்து பார்த்தார். அப்போது நெல்மணிகளை ஈசன் மழையில் நனையாமல் வேலியிட்டு காத்து அருளியதாக வரலாறு கூறுகிறது. இதுவே ‘திருநெல்வேலி’ என பெயர் வரக்காரணம் என்றும் கூறப்படுகிறது.

    இதை நினைவு கூறும் வகையில், நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக சுவாமி சன்னதி அருகே ஒரு பெரிய தட்டில் நெல்மணிகள் வைக்கப்பட்டு இருந்தன. மழை பெய்ததை நினைவூட்டும் வகையில் கோவில் ஊழியர்கள் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் தெளித்து மழைநீர் போல் தண்ணீர் அந்த பகுதியில் தேங்கி நின்றது. ஆனால் அந்த நெல் வைத்திருந்த தட்டு அருகில் மட்டும் தண்ணீர் இல்லை. அந்த நெல் மணிகளை திரளான பக்தர்கள் கைகளில் எடுத்துக் கொண்டு சாமியை வழிபட்டனர்.
    Next Story
    ×