என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்
Byமாலை மலர்11 Jan 2022 6:43 AM GMT (Updated: 11 Jan 2022 6:43 AM GMT)
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அனைத்து கொரோனா விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றி தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரி கூறியுள்ளார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி கோவிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
பின்னர் தூய்மை பணிகள் முடிந்ததும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு 12 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையொட்டி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
தெலுங்கு வருடபிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய நிகழ்வுகளுக்கு முன்பு ஒரு வருடத்தில் நான்கு முறை செவ்வாய்க்கிழமைகளில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.
இதையொட்டி கோவில் கர்ப்பாலயத்தின் கூரைகள், சுவர்கள் மற்றும் பிற உபாலயங்களில் பரிமளம் என்ற சிறப்பு நறுமண கலவை பூசப்படும்.
வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வசதி செய்து தர வேண்டும் என்பதால், திருமலையில் இன்று அறைகளை ஒதுக்கவில்லை.
பக்தர்கள் அனைத்து கொரோனா விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றி தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
பின்னர் தூய்மை பணிகள் முடிந்ததும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு 12 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையொட்டி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
தெலுங்கு வருடபிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய நிகழ்வுகளுக்கு முன்பு ஒரு வருடத்தில் நான்கு முறை செவ்வாய்க்கிழமைகளில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.
இதையொட்டி கோவில் கர்ப்பாலயத்தின் கூரைகள், சுவர்கள் மற்றும் பிற உபாலயங்களில் பரிமளம் என்ற சிறப்பு நறுமண கலவை பூசப்படும்.
வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வசதி செய்து தர வேண்டும் என்பதால், திருமலையில் இன்று அறைகளை ஒதுக்கவில்லை.
பக்தர்கள் அனைத்து கொரோனா விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றி தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X