search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதியில் புத்தாண்டு விசே‌ஷ பூஜைகள் ரத்து

    கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று நேரடியாக வழங்கப்பட இருந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி 10-ந்தேதி வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி விசே‌ஷ பூஜைகள் பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக விசே‌ஷ பூஜைகள், கூடுதலாக பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது ரத்து செய்யப்பட்டன.

    வழக்கம்போல் ஏழுமலையானுக்கு அதிகாலை 4 மணிக்கு நடைபெறும் திருப்பாவை, தோமாலை உள்ளிட்ட சேவைகள் நடைபெறுகிறது.

    இதையடுத்து வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். காலை 9 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கம்போல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஜனவரி மாதத்திற்கான ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

    இதேபோல் கடந்த 27-ந்தேதி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஜனவரி 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையில் உள்ளூர் முகவரி கொண்ட ஆதார் அட்டை உள்ள பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இன்று காலை திருப்பதி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம், அலிபிரி உட்பட 5 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுக்கள் வழங்கப்பட இருந்தது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று நேரடியாக வழங்கப்பட இருந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி 10-ந்தேதி வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் உள்ளூர் பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற வந்திருந்தனர்.

    டிக்கெட்டுகள் 10-ந்தேதி வழங்கப்படும் என தேவஸ்தான ஊழியர்கள் கூறியதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    திருப்பதியில் நேற்று 31,967 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 11,233 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×