என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது: திருப்பதி தேவஸ்தானம்
Byமாலை மலர்28 Dec 2021 7:54 AM GMT (Updated: 28 Dec 2021 7:54 AM GMT)
ஆங்கில புத்தாண்டு தரிசனம், வைகுண்ட ஏகாதசியையொட்டி பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது, என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா ஆகியவை நடக்கயிருப்பதால் வருகிற 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை முக்கிய வி.ஐ.பி. பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர்.
சாமி தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி. பக்தர்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று, கொரோனா தொற்று இல்லை என்பதற்கான 48 மணிநேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட சான்று ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும். ஆங்கில புத்தாண்டு தரிசனம், வைகுண்ட ஏகாதசியையொட்டி பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது.
கோவிலில் ஜனவரி மாதம் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி மற்றும் 14-ந்தேதி வைகுண்ட துவாதசியை முன்னிட்டு கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்களுக்கு தரிசன ஏற்பாடுகள் செய்து தரப்படும். ஜனவரி 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் தரிசனம் வழங்கப்படும்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையானை தரிசிக்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மட்டுமே வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஜனவரி மாதம் 11-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை தேவஸ்தான விடுதி அறைகள் முன்பதிவு செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்யாண கட்டாக்களில் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கை செலுத்த போதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். கல்யாணக் கட்டாக்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வழிகாட்டுதல் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமுடி இறக்கும் பணியில் நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் பக்தர்களுக்கு தினமும் அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 12 மணி வரை 10 நாட்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு மருத்துவச் சேவை அளிக்க பல்வேறு பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. வைகுண்ட வாசல் தரிசனத்தையொட்டி திருமலையில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி செய்து தரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா ஆகியவை நடக்கயிருப்பதால் வருகிற 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை முக்கிய வி.ஐ.பி. பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர்.
சாமி தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி. பக்தர்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று, கொரோனா தொற்று இல்லை என்பதற்கான 48 மணிநேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட சான்று ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும். ஆங்கில புத்தாண்டு தரிசனம், வைகுண்ட ஏகாதசியையொட்டி பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது.
கோவிலில் ஜனவரி மாதம் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி மற்றும் 14-ந்தேதி வைகுண்ட துவாதசியை முன்னிட்டு கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்களுக்கு தரிசன ஏற்பாடுகள் செய்து தரப்படும். ஜனவரி 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் தரிசனம் வழங்கப்படும்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையானை தரிசிக்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மட்டுமே வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஜனவரி மாதம் 11-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை தேவஸ்தான விடுதி அறைகள் முன்பதிவு செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்யாண கட்டாக்களில் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கை செலுத்த போதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். கல்யாணக் கட்டாக்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வழிகாட்டுதல் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமுடி இறக்கும் பணியில் நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் பக்தர்களுக்கு தினமும் அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 12 மணி வரை 10 நாட்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு மருத்துவச் சேவை அளிக்க பல்வேறு பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. வைகுண்ட வாசல் தரிசனத்தையொட்டி திருமலையில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி செய்து தரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X