என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீப மை இன்று முதல் பக்தர்களுக்கு விநியோகம்
Byமாலை மலர்23 Dec 2021 8:01 AM GMT (Updated: 23 Dec 2021 8:01 AM GMT)
கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் தீப மை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இந்த தீப மையை வைத்துக் கொள்வதால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா முடிவடைந்ததும் மகா தீப கொப்பரையில் சேமிக்கப்பட்ட தீபம் பக்தர்களுக்கு பிரசாதமாக விற்பனை செய்யப்படும். மேலும் நெய் காணிக்கை வழங்கியவர்களுக்கு இலவசமாக தீப மை வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி மகாதீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் பக்தர்களுக்கு காட்சி அளித்தது. அதன் பின்னர் பரிகார பூஜைகள் செய்து தீப கொப்பரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் ஆருத்ரா தரிசனத்தன்று தீப மையால் நடராஜருக்கு திலகமிட்டு பக்தர்கள் நெற்றியில் வைத்துக் கொள்ள தீப மை வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேக்கிங் செய்யப்பட்ட தீப மை இன்று காலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. ரூ.10 க்கு விற்பனை செய்யப்படும் இந்த தீப மையை வெளியூர் பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். உள்ளூர் பக்தர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாங்கி சென்றனர்.
கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் தீப மை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இந்த தீப மையை வைத்துக் கொள்வதால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி மகாதீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் பக்தர்களுக்கு காட்சி அளித்தது. அதன் பின்னர் பரிகார பூஜைகள் செய்து தீப கொப்பரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் ஆருத்ரா தரிசனத்தன்று தீப மையால் நடராஜருக்கு திலகமிட்டு பக்தர்கள் நெற்றியில் வைத்துக் கொள்ள தீப மை வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேக்கிங் செய்யப்பட்ட தீப மை இன்று காலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. ரூ.10 க்கு விற்பனை செய்யப்படும் இந்த தீப மையை வெளியூர் பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். உள்ளூர் பக்தர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாங்கி சென்றனர்.
கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் தீப மை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இந்த தீப மையை வைத்துக் கொள்வதால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X