search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மீனாட்சி அம்மன் கோவில்
    X
    மீனாட்சி அம்மன் கோவில்

    மீனாட்சி அம்மன் கோவில் சிறப்புகள்

    பழமையும் பெருமையும் வாய்ந்த மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள கோபுரங்களும், மண்டபங்களும் கட்டப்பட்ட ஆண்டையும், இன்னும் சில விஷயங்களையும் இங்கே பார்க்கலாம்.
    பழமையும் பெருமையும் வாய்ந்தது, மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில். கோபுரங்களாலும், மண்டபங்களாலும் நிறைந்தது இந்த ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள கோபுரங்களும், மண்டபங்களும் கட்டப்பட்ட ஆண்டையும், இன்னும் சில விஷயங்களையும் இங்கே பார்க்கலாம்.

    வருடமும்.. கட்டுமானமும்..

    1168-75 = சுவாமி கோபுரம்
    1216-38 = ராஜ கோபுரம்
    1627-28 = அம்மன் சன்னிதி கோபுரம்
    1315-47 = மேற்கு ராஜ கோபுரம்
    1372 = சுவாமி சன்னிதி கோபுரம்
    1374 = சுவாமி சன்னிதி மேற்கு கோபுரம்
    1452 = ஆறு கால் மண்டபம்
    1526 = 100 கால் மண்டபம்
    1559 = தெற்கு ராஜ கோபுரம்
    1560 = சுவாமி சன்னிதி வடக்கு கோபுரம்
    1562 = தேரடி மண்டபம்
    1563 = பழைய ஊஞ்சல் மண்டபம்
    1564 - 72 = வடக்கு ராஜ கோபுரம்
    1564-72 = வெள்ளி அம்பல மண்டபம்
    1569 = சித்ர கோபுரம், ஆயிரங்கால்
    மண்டபம், 63 நாயன்மார்கள்
    1570 = அம்மன் சன்னிதி மேற்கு கோபுரம்
    1611 = வீர வசந்தராயர் மண்டபம்
    1613 = இருட்டு மண்டபம்
    1623 = கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம்
    1623-59 = ராயர் கோபுரம், அஷ்டசக்தி
    1626-45 = புது மண்டபம்
    1635 = நகர மண்டபம்
    1659 = பேச்சியக்காள் மண்டபம்
    1708 = மீனாட்சி நாயக்கர் மண்டபம்
    1975 = சேர்வைக்காரர் மண்டபம்

    எட்டுதிசை எல்லைகள்

    சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை, காயா பாறை, பாடா குயில்
    இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்லைப் பகுதிகளாகும்.
    சீறா நாகம் - நாகமலை
    கறவா பசு - பசுமலை
    பிளிறா யானை - யானைமலை
    முட்டா காளை - திருப்பாலை
    ஓடா மான் - சிலைமான்
    வாடா மலை - அழகர்மலை
    காயா பாறை - வாடிப்பட்டி
    பாடா குயில் - குயில்குடி

    புண்ணியம்

    திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்
    காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்
    காசியில் இறந்தால் புண்ணியம்
    சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்
    திருவண்ணாமலையை நினைத்தாலே
    மதுரையில் பிறந்தாலும்
    மதுரையில் வாழ்ந்தாலும்
    மதுரையில் இறந்தாலும்
    மதுரையில் வழிபட்டாலும்
    மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.

    மதுரை பஞ்சபூதத் தலங்கள்
    Next Story
    ×