என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
ராமேசுவரம் கோவிலில் 1 லட்சம் ருத்ராட்ச மாலைகளால் ஆன மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜர்-சிவகாமி
Byமாலை மலர்20 Dec 2021 8:41 AM GMT (Updated: 20 Dec 2021 8:41 AM GMT)
ராமேசுவரம் கோவிலில் சுமார் 1 லட்சம் ருத்ராட்ச மாலைகளால் ஆன மண்டபத்தில் நடராஜர் -சிவகாமி அம்பாளுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 9-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் தினந்தோறும் ராமநாத சுவாமி, மாணிக்கவாசகர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி கோவிலில் உள்ள 3-ம் பிரகாரத்தை வலம் வந்தனர்.
கடைசி நாளான இன்று அதிகாலையில் ராமநாதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நடராஜர் -சிவகாமி அம்பாள் ஆகியோர் தங்க கேடயத்தில் 3-ம் பிரகாரத்தில் எழுந்தருளினர். அங்கு சுமார் 1 லட்சம் ருத்ராட்ச மாலைகளால் ஆன மண்டபத்தில் நடராஜர் -சிவகாமி அம்பாளுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக 7 திரைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு ஒவ்வொரு திரை திறப்பின்போது சிறப்பு பூஜை நடந்தது.
7-வது திரையான வெண்திரை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
கடைசி நாளான இன்று அதிகாலையில் ராமநாதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நடராஜர் -சிவகாமி அம்பாள் ஆகியோர் தங்க கேடயத்தில் 3-ம் பிரகாரத்தில் எழுந்தருளினர். அங்கு சுமார் 1 லட்சம் ருத்ராட்ச மாலைகளால் ஆன மண்டபத்தில் நடராஜர் -சிவகாமி அம்பாளுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக 7 திரைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு ஒவ்வொரு திரை திறப்பின்போது சிறப்பு பூஜை நடந்தது.
7-வது திரையான வெண்திரை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X