என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பதியில் இன்று முதல் ஆண்டாள் திருப்பாவை
Byமாலை மலர்16 Dec 2021 8:10 AM GMT (Updated: 16 Dec 2021 12:54 PM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை சுப்ரபாதம் பாடி ஏழுமலையானை துயில் எழுப்புவது வழக்கம். ஆனால் மார்கழி மாதம் மட்டும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாடப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, அபிஷேகம், கல்யாண உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் நிறுத்தப்பட்டது.
ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்த பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொற்று பரவல் குறைந்ததால் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது.
இந்த சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. படிப்படியாக தொற்று குறைந்ததால் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப் பட்டது. தற்போது தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய மாநில அரசுகளிடம் தேவஸ்தனம் சார்பில் அனுமதி கேட்கப் பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.
இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பதி கோவிலில் இன்று முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை சுப்ரபாதம் பாடி ஏழுமலையானை துயில் எழுப்புவது வழக்கம். ஆனால் மார்கழி மாதம் மட்டும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாடப்படும். மார்கழி மாதம் பிறந்ததையொட்டி இன்று அதிகாலை ஏழுமலையானுக்கு ஆண்டாள் திருப்பாவை பாடப்பட்டது. மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் திருப்பாவையே பாடப்படும். தை மாதத்தில் இருந்து வழக்கம்போல் சுப்ரபாத சேவை நடக்கும்.
திருப்பதியில் நேற்று 33,898 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 17,345 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்த பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொற்று பரவல் குறைந்ததால் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது.
இந்த சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. படிப்படியாக தொற்று குறைந்ததால் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப் பட்டது. தற்போது தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய மாநில அரசுகளிடம் தேவஸ்தனம் சார்பில் அனுமதி கேட்கப் பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.
இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பதி கோவிலில் இன்று முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை சுப்ரபாதம் பாடி ஏழுமலையானை துயில் எழுப்புவது வழக்கம். ஆனால் மார்கழி மாதம் மட்டும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாடப்படும். மார்கழி மாதம் பிறந்ததையொட்டி இன்று அதிகாலை ஏழுமலையானுக்கு ஆண்டாள் திருப்பாவை பாடப்பட்டது. மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் திருப்பாவையே பாடப்படும். தை மாதத்தில் இருந்து வழக்கம்போல் சுப்ரபாத சேவை நடக்கும்.
திருப்பதியில் நேற்று 33,898 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 17,345 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X