search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீகாளஹஸ்தி
    X
    ஸ்ரீகாளஹஸ்தி

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மார்கழி மாதத்தில் நடக்கும் பூஜைகள் விவரம்

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி 16.12.21 முதல் 15.1.22 வரை நடக்கும் பூஜை விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி 16.12.21 முதல் 15.1.22 வரை நடக்கும் பூஜை விவரங்களை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, அதிகாலை 4 மணிக்கு மங்கல வாத்தியங்கள், அதிகாலை 4.15 மணிக்கு திருமஞ்சன சேவை, அதிகாலை 4.30 மணிக்கு கோபூஜை, சுப்ரபாத சேவை இல்லை. அதற்கு பதிலாக தேவாரம் பாடப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு அனுமதியின்றி முதல் கால அபிஷேகம், 2-ம் கால மற்றும் 3-ம் கால அபிஷேகம் கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு துணை சன்னதிகளுக்கு நைவேத்தியம்.

    அதைத்தொடர்ந்து கொரோனா தொற்று விதிமுறைக்கு உட்பட்டு காலை 7.30 மணிக்கு ஆண்டாள் (உற்சவ மூர்த்தி) கோவிலுக்குள் ஊர்வலம் நடத்தப்படும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு பிரதோஷ கால அபிஷேகம் நடக்கிறது.

    வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமை போன்ற நாட்களில் இரவு 9 மணிக்கும், செவ்வாய், புதன், வியாழக்கிழமை போன்ற நாட்களில் இரவு 8.30 மணிக்கு பள்ளியறை பூஜை நடத்தப்படுகிறது.

    மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×