search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பத்மாவதி தாயார் கோவில்
    X
    பத்மாவதி தாயார் கோவில்

    பத்மாவதி தாயார் கோவிலில் நாளை பஞ்சமி தீர்த்தம்

    பத்மாவதி தாயார் கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை 11.52 மணிக்கு பஞ்சமி தீர்த்தம் (சக்கர ஸ்நானம்) பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. நிறைவு நாளான நாளை (புதன்கிழமை) காலை 11.52 மணிக்கு பஞ்சமி தீர்த்தம் (சக்கர ஸ்நானம்) பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. கோவிலில் உள்ள வாகன மண்டபத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சிறிய புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரை புஷ்ப யாகம் நடக்கிறது.

    முன்னதாக கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது, என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×