search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பத்மாவதி தாயார்
    X
    பத்மாவதி தாயார்

    திருச்சானூர் பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: சர்வ பூபால, கருட வாகன சேவை

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட வாகன சேவை நடந்தது. இதில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ பூபால வாகன சேவை மற்றும் மாலை 5 மணியில் இருந்து 6 மணிவரை தங்கத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை நடந்தது.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணி முதல் 8 மணி வரை கருட வாகன சேவை நடந்தது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    Next Story
    ×