என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
கிரிவலப்பாதை குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் இன்று தரிசனம் செய்ய அனுமதியில்லை
Byமாலை மலர்2 Dec 2021 5:53 AM GMT (Updated: 2 Dec 2021 5:53 AM GMT)
இன்று ஒரு நாள் மட்டும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவிலில் குபேர கிரிவல நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த நாளில் குபேர லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக ஒரே நேரத்தில் அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள். பக்தர்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் கூடும்போது அரசால் தெரிவிக்கப்பட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறையை பின்பற்றுவது கடினமாகும்.
எனவே கொரோனா தொற்று பரவலை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது.
மேலும் இன்று ஆகம விதிப்படி அனைத்துப் பூஜைகளும் நடக்கிறது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைய உதவிட வேண்டும்.
மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
எனவே கொரோனா தொற்று பரவலை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது.
மேலும் இன்று ஆகம விதிப்படி அனைத்துப் பூஜைகளும் நடக்கிறது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைய உதவிட வேண்டும்.
மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X