search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கிரிவலப்பாதை குபேர லிங்க கோவில்
    X
    கிரிவலப்பாதை குபேர லிங்க கோவில்

    கிரிவலப்பாதை குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் இன்று தரிசனம் செய்ய அனுமதியில்லை

    இன்று ஒரு நாள் மட்டும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது.
    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவிலில் குபேர கிரிவல நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த நாளில் குபேர லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக ஒரே நேரத்தில் அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள். பக்தர்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் கூடும்போது அரசால் தெரிவிக்கப்பட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறையை பின்பற்றுவது கடினமாகும்.

    எனவே கொரோனா தொற்று பரவலை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது.

    மேலும் இன்று ஆகம விதிப்படி அனைத்துப் பூஜைகளும் நடக்கிறது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைய உதவிட வேண்டும்.

    மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×