search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பத்மாவதி தாயார்
    X
    பத்மாவதி தாயார்

    திருச்சானூர் பிரம்மோற்சவம்: இன்று இரவு அம்ச வாகனத்தில் அருள்பாலிக்கும் பத்மாவதி தாயார்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் கொரோனா தொற்றுக் காரணமாக கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 9 நாட்கள் நடைபெறும் விழாவில் பத்மாவதி தாயார் பல்வேறு வாகனங்களில் வீதி வருகிறார்.
    கொரோனா தொற்றுக் காரணமாக பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    இந்த நிலையில் நேற்று இரவு சின்ன சேஷ வாகனத்திலும், இன்று காலை பெரிய சேஷ வாகனத்திலும் பத்மாவதி தாயார் வீதி உலா வந்தார். இன்று இரவு அம்ச வாகனத்தில் அருள்பாலிக்கிறார்.
    Next Story
    ×