search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    திருப்பரங்குன்றம், சோலைமலை கோவிலில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன்கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நேற்று வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பத்தடி மண்டப வளாகத்தில் உற்சவர் சன்னதி முன்பாக சர்வ அலங்காரத்தில் சத்தியகிரிஸ்வரரும், முருகப்பெருமானும் எழுந்தருளினர். மேளதாளங்கள் முழங்க கோவர்த்தனாம் பிகையிடம் இருந்துசக்திவேலான நவரத்தினவேல் பெற்று சகல பரிவாரங்களுடன் நந்தியை வலம் வந்து முருகப் பெருமானிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் இன்று மாலை 4 மணியளவில் கோவிலுக்குள் நடக்கிறது. இந்த நிலையில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை 3 மணிநேரம் பக்தர்களுக்கு அனுமதிஇல்லை என்று கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நாளை (10-ந்தேதி) மாலையில் கோவிலுக்குள் பாவாடை தரிசனம் நடக்கிறது.

    அழகர் மலை உச்சியில் உள்ள சோலை மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவில் இன்று பக்தர்கள் காலையில் இருந்து பகல் 12.30 மணிவரை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள். அதன் பின்னர் மாலையில் நடைபெறும் சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.அதன் பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மேலும் நாளை நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவில் கலந்து கொள்ளவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருக்கல்யாண நிகழ்வு முடிந்ததும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப் படுவார்கள். அரசின் கொரோனா நோய் தடுப்பு நடைமுறை விதிமுறைகளை பக்தர்கள் பின்பற்ற ஒத்துளழப்பு தர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×