என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது
Byமாலை மலர்8 Nov 2021 5:03 AM GMT (Updated: 8 Nov 2021 5:03 AM GMT)
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகிய 2 நாள் நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கடந்த 4-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலசந்தி, விளா பூஜை ஆகியவை நடைபெற்று வருகிறது. தினமும் காலையும், மாலையும் யாகசாலை பூஜை நடைபெறுகிறது.
5-ம் திருநாளான இன்று(திங்கட்கிழமை) பகல் 11 மணிக்கு கோவில் மேல வாசலில் உள்பிரகாரத்தில் வைத்து தாரகாசுரன் வதம் நடைபெறுகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) சஷ்டியை முன்னிட்டு பகல் 11 மணிக்கு சண்முக அர்ச்சனை மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோவில் மேலவாசல் உள்பிரகாரத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
12-ந் தேதி இரவு கழுகாசலமூர்த்தி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 14-ந் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நிறைவு பெறுகிறது. சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகிய 2 நாள் நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், கோவில் தலைமை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
5-ம் திருநாளான இன்று(திங்கட்கிழமை) பகல் 11 மணிக்கு கோவில் மேல வாசலில் உள்பிரகாரத்தில் வைத்து தாரகாசுரன் வதம் நடைபெறுகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) சஷ்டியை முன்னிட்டு பகல் 11 மணிக்கு சண்முக அர்ச்சனை மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோவில் மேலவாசல் உள்பிரகாரத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
12-ந் தேதி இரவு கழுகாசலமூர்த்தி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 14-ந் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நிறைவு பெறுகிறது. சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகிய 2 நாள் நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், கோவில் தலைமை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X