search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவில்
    X
    சபரிமலை ஐயப்பன் கோவில்

    சபரிமலையில் அடுத்த ஆண்டு கோவில் நடை திறக்கப்படும் நாட்களின் விவரங்கள்

    பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மார்ச் 8-ந்தேதி திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடுத்த ஆண்டு (2022) நடை திறப்பு மற்றும் சிறப்பு பூஜை நாட்கள் குறித்த கால அட்டவணையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    மாசி மாத பூஜைக்காக கோவில் நடை 2022-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி திறக்கப்பட்டு 17-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மார்ச் 8-ந்தேதி திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். மார்ச் 9-ந் தேதி திருவிழா கொடியேற்றம். 18-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறும்.

    சித்திரை மாத பூஜைகளுக்காக ஏப்ரல் 10-ந் தேதி நடை திறக்கப்பட்டு 18-ந் தேதி வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடக்கும். 15-ந்தேதி விஷூ பண்டிகை விழா நடக்கிறது.

    வைகாசி மாத பூஜைக்காக மே 14-ந் தேதி நடை திறக்கப்பட்டு 19-ந் தேதி நடை அடைக்கப்படும்.

    சபரிமலை சபரிமலையப்பன் விக்ரகம் நிறுவப்பட்ட நாளையொட்டி 8-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 9-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    ஆனி மாத பூஜைக்காக 2022 ஜூன் 14-ந் தேதி நடை திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

    ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை பூஜைகள் நடக்கும்.

    ஓணம் பண்டிகையையொட்டி செப்டம்பர் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை பூஜைகள் நடக்கும்.

    புரட்டாசி மாத பூஜைக்காக மீண்டும் சபரிமலை சபரிமலையப்பன் கோவில் நடை செப்டம்பர் 16-ந் தேதி திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-ந் தேதி நடை திறக்கப்படும். 22-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    சித்திரை ஆட்ட விஷேச பூஜைக்காக மீண்டும் சபரிமலைசபரிமலையப்பன் கோவில் நடை அக்டோபர் 24-ந் தேதி திறக்கப்படும். 25-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    2022-ம் ஆண்டின் மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ந் தேதி சபரிமலை சபரிமலையப்பன் கோவில் நடை திறக்கப்படும். டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    Next Story
    ×