என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் புரட்டாசி திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்7 Oct 2021 7:38 AM GMT (Updated: 7 Oct 2021 7:38 AM GMT)
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் புரட்டாசி திருவிழா நாட்களில் அய்யா வைகுண்ட தர்மபதி அன்னம், கருட வாகனம், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வருவார்.
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்திப்பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) காலை அய்யா திருநாம கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.
முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செங்கொடி, பதியை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடியேற்றம் நடக்கும். அன்று மாலை அய்யா காளை வாகனத்தில் பதிவலம் வருவார். அதை தொடர்ந்து திருவிழா நாட்களில் அய்யா வைகுண்ட தர்மபதி அன்னம், கருட வாகனம், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வருவார்.
விழாவின் 8-ம் நாளான 15-ந் தேதி இரவு முக்கிய நிகழ்வான சரவிளக்கு பணிவிடை, திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடைபெறுகிறது. 17-ந் தேதி காலை 11 மணிக்கு திருத்தேர் உற்வசமும், அன்று இரவு அய்யா பூம்பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதலும் நடக்கிறது., அதைதொடர்ந்து திருநாம கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறுகிறது.
முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செங்கொடி, பதியை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடியேற்றம் நடக்கும். அன்று மாலை அய்யா காளை வாகனத்தில் பதிவலம் வருவார். அதை தொடர்ந்து திருவிழா நாட்களில் அய்யா வைகுண்ட தர்மபதி அன்னம், கருட வாகனம், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வருவார்.
விழாவின் 8-ம் நாளான 15-ந் தேதி இரவு முக்கிய நிகழ்வான சரவிளக்கு பணிவிடை, திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடைபெறுகிறது. 17-ந் தேதி காலை 11 மணிக்கு திருத்தேர் உற்வசமும், அன்று இரவு அய்யா பூம்பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதலும் நடக்கிறது., அதைதொடர்ந்து திருநாம கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X