என் மலர்
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று தொடங்குகிறது
ஸ்ரீரங்கம் கோவிலில் காலை 6-30 முதல் காலை 7-30 மணி வரையில் விஸ்வரூபத்துக்கும், காலை 9 முதல் பகல் 12 மணி வரையிலும், பகல் 1-15 முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் பக்தர்கள் மூலஸ்தான தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. நவராத்திரி உற்சவத்தின் முதல் நாளான இன்று பகல் 1-30 மணிக்கு தாயார், மூலஸ்தானத்தில் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 6-30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபம் சென்றடைகிறார். அங்கு 7-45 மணிக்கு கொலு தொடங்குகிறது. பின்னர் அங்கிருந்து இரவு 9-45 மணிக்குப் புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். காலை 6-30 முதல் 7-30 மணி வரையில் விஸ்வரூபத்துக்கும், காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையில் மூலஸ்தானத்தில் சேவைக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
இதேபோன்று 7, 11, 13-ந் தேதிகளில் தினந்தோறும் மாலை 5.30 மணிக்கு தாயார், மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபம் சேருவார். இரவு 7 மணிக்கு கொலு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவடையும். பின்னர் கொலு மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
இந்த நாட்களில் காலை 6-30 முதல் காலை 7-30 மணி வரையில் விஸ்வரூபத்துக்கும், காலை 9 முதல் பகல் 12 மணி வரையிலும், பகல் 1-15 முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் பக்தர்கள் மூலஸ்தான தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
இதேபோன்று 8-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து தாயார் புறப்பட்டு கொலு மண்டபம் சேருவார். மாலை 6.15 மணிக்கு கொலு தொடங்கி இரவு 7.15 மணி வரையில் நடைபெறும். இரவு 8 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சேருவார். இந்த 3 நாட்களும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதியில்லை.
7-ந் திருநாளான 12-ந் தேதி ரெங்கநாச்சியார் திருவடி சேவை நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4-45 மணிக்கு கொலு மண்டபம் சேருவார். இரவு 7-30 மணிக்கு கொலு தொடங்கி இரவு 9-30 மணி வரையில் நடைபெறும். இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைவார். அன்றைய தினம் காலை 6-30 முதல் காலை 7-30 மணி வரையிலும் விஸ்வரூப தரிசனத்துக்கும், காலை 9 முதல் முற்பகல் 11 மணி வரையில் பக்தர்கள் மூலவர் சேவைக்கும் அனுமதிக்கப்படுவர்.
9-ந் திருநாளான 14-ந் தேதி மாலை 5 மணிக்கு சரஸ்வதி பூஜையையொட்டி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு திருமஞ்சனம் கண்டருள்வார். அங்கு அலங்காரம் அமுது செய்யப்பட்டு, இரவு 10.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். அன்றைய தினம் காலை 6.30 முதல் காலை 7.30 மணிக்கு விஸ்வரூபத்துக்கும், காலை 9 முதல் பகல் 12 மணி வரையிலும், பகல் 1.15 முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும் பக்தர்கள் மூலவர் தரிசனத்துக்கும் அனுமதிக்கப்படுவர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதேபோன்று 7, 11, 13-ந் தேதிகளில் தினந்தோறும் மாலை 5.30 மணிக்கு தாயார், மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபம் சேருவார். இரவு 7 மணிக்கு கொலு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவடையும். பின்னர் கொலு மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
இந்த நாட்களில் காலை 6-30 முதல் காலை 7-30 மணி வரையில் விஸ்வரூபத்துக்கும், காலை 9 முதல் பகல் 12 மணி வரையிலும், பகல் 1-15 முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் பக்தர்கள் மூலஸ்தான தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
இதேபோன்று 8-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து தாயார் புறப்பட்டு கொலு மண்டபம் சேருவார். மாலை 6.15 மணிக்கு கொலு தொடங்கி இரவு 7.15 மணி வரையில் நடைபெறும். இரவு 8 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சேருவார். இந்த 3 நாட்களும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதியில்லை.
7-ந் திருநாளான 12-ந் தேதி ரெங்கநாச்சியார் திருவடி சேவை நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4-45 மணிக்கு கொலு மண்டபம் சேருவார். இரவு 7-30 மணிக்கு கொலு தொடங்கி இரவு 9-30 மணி வரையில் நடைபெறும். இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைவார். அன்றைய தினம் காலை 6-30 முதல் காலை 7-30 மணி வரையிலும் விஸ்வரூப தரிசனத்துக்கும், காலை 9 முதல் முற்பகல் 11 மணி வரையில் பக்தர்கள் மூலவர் சேவைக்கும் அனுமதிக்கப்படுவர்.
9-ந் திருநாளான 14-ந் தேதி மாலை 5 மணிக்கு சரஸ்வதி பூஜையையொட்டி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு திருமஞ்சனம் கண்டருள்வார். அங்கு அலங்காரம் அமுது செய்யப்பட்டு, இரவு 10.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். அன்றைய தினம் காலை 6.30 முதல் காலை 7.30 மணிக்கு விஸ்வரூபத்துக்கும், காலை 9 முதல் பகல் 12 மணி வரையிலும், பகல் 1.15 முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும் பக்தர்கள் மூலவர் தரிசனத்துக்கும் அனுமதிக்கப்படுவர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Next Story






