என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நடை திறக்கப்பட்ட 2-வது நாளில் சபரிமலையில் 15 ஆயிரம் பேர் தரிசனம்
Byமாலை மலர்18 Sep 2021 4:46 AM GMT (Updated: 18 Sep 2021 4:46 AM GMT)
சபரிமலையில் ஐயப்பசாமியை தரிசனம் செய்ய கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
திருவனந்தபுரம் :
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இரு முடிகட்டுகளுடன் 18-ம் படி வழியாக ஏறி வந்து 15 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பசாமியை தரிசனம் செய்தனர். நேற்று வழக்கமான பூஜை வழிபாடுகளுடன் களபாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் களப கலச ஊர்வலம் நடந்தது. 21-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக மாத பூஜையின் போது தற்போது தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
எனவே சபரிமலையில் ஐயப்பசாமியை தரிசனம் செய்ய கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இரு முடிகட்டுகளுடன் 18-ம் படி வழியாக ஏறி வந்து 15 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பசாமியை தரிசனம் செய்தனர். நேற்று வழக்கமான பூஜை வழிபாடுகளுடன் களபாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் களப கலச ஊர்வலம் நடந்தது. 21-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக மாத பூஜையின் போது தற்போது தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
எனவே சபரிமலையில் ஐயப்பசாமியை தரிசனம் செய்ய கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X