search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசேகரன்பட்டினத்தில் கோவில் வளாகத்தில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்
    X
    குலசேகரன்பட்டினத்தில் கோவில் வளாகத்தில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்

    குலசேகரன்பட்டினத்தில் கோவில் வளாகத்தில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்

    தசரா திருவிழா இன்னும் ஒருமாதத்தில் தொடங்கவுள்ள நிலையில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.
    கொரோனா பரவல் தடுப்பு காரணமாக தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதித்துள்ளது. தசரா திருவிழா இன்னும் ஒருமாதத்தில் தொடங்கவுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    தசரா திருவிழாவிற்கு விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று குலசேகரன்பட்டினத்துக்கு வந்து, கடலில் புனித நீராடினர். பின்னர் அவர்கள் செவ்வாடை அணிந்து கோவில் முன்பு நின்று அம்மனை நினைத்து வழிபட்டு மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
    Next Story
    ×