என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலி வேட்டை
Byமாலை மலர்28 Aug 2021 6:29 AM GMT (Updated: 28 Aug 2021 6:29 AM GMT)
9-ம் விழாவான இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை 10-ம் நாள் விழாவில் அய்யா வைகுண்டசாமி இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்றி மிக எளிமையான முறையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் மிகக்குறைந்த அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவிழா 11 நாட்கள் நடைபெற்று வருகிறது.
விழாவின் 8-ம் நாளான நேற்று அய்யா வைகுண்டசாமி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா கொலுவீற்றிருக்க கலிவேட்டைக்கு வாகனம் புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்ச்சிக்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்கினார். ராஜவேல் லோகாதிபதி முன்னிலை வகித்தனர்.
தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட வாகனம் முத்திரி கிணற்றங்கரைக்கு சென்றது. அங்கு குறைவான அளவில் இருந்த பக்தர்கள் முன்னிலையில் அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த் ஆகியோர் செய்திருந்தனர்.
முத்திரி கிணற்றங்கரையில் இருந்து புறப்பட்ட குதிரை வாகனம் வடக்கு ரத வீதி மற்றும் வடக்கு வாசல் கோபுரத்தின் வழியாக தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு அய்யா வைகுண்டசாமி பக்தர்களுக்கு தவக்கால காட்சியளித்தார்.
9-ம் விழாவான இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை 10-ம் நாள் விழாவில் அய்யா வைகுண்டசாமி இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 30-ந் தேதி திங்கட்கிழமை 11-ம் நாள் விழா நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் இரவு தலைமை பதியின் உள்பகுதியில் வாகன பவனியும், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு ஆகியவையும் எளிய முறையில் நடக்கிறது.
விழாவின் 8-ம் நாளான நேற்று அய்யா வைகுண்டசாமி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா கொலுவீற்றிருக்க கலிவேட்டைக்கு வாகனம் புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்ச்சிக்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்கினார். ராஜவேல் லோகாதிபதி முன்னிலை வகித்தனர்.
தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட வாகனம் முத்திரி கிணற்றங்கரைக்கு சென்றது. அங்கு குறைவான அளவில் இருந்த பக்தர்கள் முன்னிலையில் அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த் ஆகியோர் செய்திருந்தனர்.
முத்திரி கிணற்றங்கரையில் இருந்து புறப்பட்ட குதிரை வாகனம் வடக்கு ரத வீதி மற்றும் வடக்கு வாசல் கோபுரத்தின் வழியாக தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு அய்யா வைகுண்டசாமி பக்தர்களுக்கு தவக்கால காட்சியளித்தார்.
9-ம் விழாவான இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை 10-ம் நாள் விழாவில் அய்யா வைகுண்டசாமி இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 30-ந் தேதி திங்கட்கிழமை 11-ம் நாள் விழா நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் இரவு தலைமை பதியின் உள்பகுதியில் வாகன பவனியும், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு ஆகியவையும் எளிய முறையில் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X