என் மலர்
ஆன்மிகம்

மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமையில் சன்னிதானத்தில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்த படம்.
சபரிமலையில் களபாபிஷேக ஊர்வலம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமையில் சன்னிதானத்தில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது..
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக 15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பூஜை நடந்து வருகிறது. நாட்டில் வேளாண் பணிகள் மேம்பாடு அடையவும், நெற்கதிர் அறுவடை செழித்தோங்கவும் 17-ம் தேதி நிறை புத்தரிசி பூஜை நடந்தது.
நேற்று மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமையில் சன்னிதானத்தில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
21-ந் தேதி திருவோண விழா சிறப்பு பூஜை வழிபாடுகள் நடக்கும்.
அன்றைய தினம் பக்தர்களுக்கு ஓண விருந்து (சத்யா) திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும். ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை 23-ந் தேதி இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.
நேற்று மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமையில் சன்னிதானத்தில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
21-ந் தேதி திருவோண விழா சிறப்பு பூஜை வழிபாடுகள் நடக்கும்.
அன்றைய தினம் பக்தர்களுக்கு ஓண விருந்து (சத்யா) திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும். ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை 23-ந் தேதி இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.
Next Story






