என் மலர்
ஆன்மிகம்

காவிரி அன்னைக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி
காவிரி அன்னைக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி
கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, கிருஷ்ணா, வைகை, தாமிரபரணி ஆகிய 7 புனித நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கலசத்தில் காவிரி அன்னையின் முகம் அமைத்து மலர் அர்ச்சனை செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆடிப்பெருக்கு நாளின்போதும் திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில் காவிரி அன்னைக்கு சீர்வரிசை வழங்குவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி ஆற்றில் பூஜைகள் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே நேற்று ஆடி கிருத்திகை நாளில் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதன்படி திருச்செங்கோடு பேரவை அலுவலகத்தில் உள்ள காவிரி அன்னை சிலைக்கு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு மாலை அணிவித்தார். பொதுச்செயலாளர் குமரவேல், பொருளாளர் மனோகரன் ஆகியோர் பட்டு வஸ்திரம் அணிவித்தனர். இதையடுத்து கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, கிருஷ்ணா, வைகை, தாமிரபரணி ஆகிய 7 புனித நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கலசத்தில் காவிரி அன்னையின் முகம் அமைத்து மலர் அர்ச்சனை செய்யப்பட்டது.
பின்னர் கொக்கராயன்பேட்டை காவிரி கரைக்கு சென்று தேங்காய், பழம் வெற்றிலைப்பாக்கு, பட்டு வஸ்திரம், வளையல், மஞ்சள், குங்குமம், திருமஞ்சன பொடி உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருட்கள் மற்றும் 7 புண்ணிய நதிகளின் தீர்த்தம் காவிரி நதியில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் காவிரிக்கரையில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. இதில் பேரவை நிர்வாகிகள் பாலச்சந்திரன், ஸ்ரீஹரி, தனபால், பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன்படி திருச்செங்கோடு பேரவை அலுவலகத்தில் உள்ள காவிரி அன்னை சிலைக்கு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு மாலை அணிவித்தார். பொதுச்செயலாளர் குமரவேல், பொருளாளர் மனோகரன் ஆகியோர் பட்டு வஸ்திரம் அணிவித்தனர். இதையடுத்து கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, கிருஷ்ணா, வைகை, தாமிரபரணி ஆகிய 7 புனித நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கலசத்தில் காவிரி அன்னையின் முகம் அமைத்து மலர் அர்ச்சனை செய்யப்பட்டது.
பின்னர் கொக்கராயன்பேட்டை காவிரி கரைக்கு சென்று தேங்காய், பழம் வெற்றிலைப்பாக்கு, பட்டு வஸ்திரம், வளையல், மஞ்சள், குங்குமம், திருமஞ்சன பொடி உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருட்கள் மற்றும் 7 புண்ணிய நதிகளின் தீர்த்தம் காவிரி நதியில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் காவிரிக்கரையில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. இதில் பேரவை நிர்வாகிகள் பாலச்சந்திரன், ஸ்ரீஹரி, தனபால், பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






