என் மலர்
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை மூடப்பட்டு வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.
இன்று ஆடிப்பெருக்கு விழா: கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு
இன்று ஆடிப்பெருக்கு விழா நடைபெறும் நிலையில் கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள், புதுமண தம்பதிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருச்சி :
இன்று(செவ்வாய்க்கிழமை) ஆடிப்பெருக்கு விழா ஆகும். இந்நாளில் காவிரி கரையோர பகுதிகளில் காவிரி அன்னைக்கு படையலிட்டு பூஜைகள் செய்வது வழக்கம். புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டும், புதுப்பெண்கள் புதிதாக தாலி மாற்றிக் கொள்வது வழக்கம். இந்த விழா குறிப்பாக திருச்சி காவிரி கரையோரம், அம்மா மண்டபம் படித்துறைகளில் விமரிசையாக நடைபெறும். கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
ஆனால், கொரோனா 3-வது அலையை தடுக்கும் பொருட்டு முக்கிய கோவில்களை அடைக்க தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் மற்றும் வயலூர் முருகன் கோவில்கள் முன்பு தடுப்புகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் வழக்கமான பூஜைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
இதனால், வழக்கமாக நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா திருச்சியில் களையிழந்து உள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக இன்று நடைபெற இருக்கும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, வடக்கு வாசல் (கொள்ளிடம் ஆறு), தில்லைநாயகம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை மற்றும் ஓடத்துறை ஆகிய படித்துறைகள் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவிரி ஆற்றின் கரைகளில் கூடி வழிபாடு செய்வதற்கும், கூடுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றின் கரைகளில் வழிபாடு செய்வதற்கு வர வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(செவ்வாய்க்கிழமை) ஆடிப்பெருக்கு விழா ஆகும். இந்நாளில் காவிரி கரையோர பகுதிகளில் காவிரி அன்னைக்கு படையலிட்டு பூஜைகள் செய்வது வழக்கம். புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டும், புதுப்பெண்கள் புதிதாக தாலி மாற்றிக் கொள்வது வழக்கம். இந்த விழா குறிப்பாக திருச்சி காவிரி கரையோரம், அம்மா மண்டபம் படித்துறைகளில் விமரிசையாக நடைபெறும். கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
ஆனால், கொரோனா 3-வது அலையை தடுக்கும் பொருட்டு முக்கிய கோவில்களை அடைக்க தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் மற்றும் வயலூர் முருகன் கோவில்கள் முன்பு தடுப்புகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் வழக்கமான பூஜைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
இதனால், வழக்கமாக நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா திருச்சியில் களையிழந்து உள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக இன்று நடைபெற இருக்கும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, வடக்கு வாசல் (கொள்ளிடம் ஆறு), தில்லைநாயகம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை மற்றும் ஓடத்துறை ஆகிய படித்துறைகள் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவிரி ஆற்றின் கரைகளில் கூடி வழிபாடு செய்வதற்கும், கூடுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றின் கரைகளில் வழிபாடு செய்வதற்கு வர வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






