என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமேசுவரம் கோவிலில் விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி
    X
    ராமேசுவரம் கோவிலில் விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி

    ராமேசுவரம் கோவிலில் விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி

    கொரோனா பரவல் தடுப்பு முழு ஊரடங்கு காரணமாக இரண்டாவது ஆண்டாக இந்த முறையும் ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை காண பக்தர்கள் யாரும் அனுமதிக் கப்பட வில்லை.
    ராமேசுவரம்ராமநாதசாமி கோவில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் விபீஷணர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. தங்க கேடயத்தில் 3-ம் பிரகாரத்தின் மையப் பகுதிக்கு ராமர், சீதாதேவி லட்சுமணருடன் எழுந்த ருளினார்.

    தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த இலங்கை மன்னர் ராவணன் தம்பி விபீஷணருக்கு ராமபிரான் பரிவட்டம் கட்டி இலங்கை மன்னராக
    பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்து. சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. பட்டாபிஷேக நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பழனிக்குமார், நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    கொரோனா பரவல் தடுப்பு முழு ஊரடங்கு காரணமாக இரண்டாவது ஆண்டாக இந்த முறையும் ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை காண பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.
    Next Story
    ×