என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகம் பக்தர்கள் இன்றி நடந்தது
Byமாலை மலர்26 May 2021 3:51 AM GMT (Updated: 26 May 2021 3:51 AM GMT)
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாககம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது.
கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மருதமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழா நடைபெறுமா? என்று பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது
இந்த நிலையில் வைகாசி விசாகமான நேற்று அதிகாலை 5 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் காட்சி அளித்தார். மகாதீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள வில்லை. விழா மிக எளிமையாக நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.இதேபோல மலைப்பாதையில் உள்ள இடும்பன் கோவிலில் இடும்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த இடும்பன் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மருதமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழா நடைபெறுமா? என்று பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது
இந்த நிலையில் வைகாசி விசாகமான நேற்று அதிகாலை 5 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் காட்சி அளித்தார். மகாதீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள வில்லை. விழா மிக எளிமையாக நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.இதேபோல மலைப்பாதையில் உள்ள இடும்பன் கோவிலில் இடும்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த இடும்பன் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X