search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்மாவதி -சீனிவாசன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடத்தப்படுகிறது.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்மாவதி -சீனிவாசன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் 22-ந் தேதி வரை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    முதல் நாளான இன்று மலையப்பசாமி கஜ வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். இரண்டாவது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) அஸ்வ வாகனத்திலும், 3-வது நாளான சனிக்கிழமை கருட வாகனத்திலும் வீதி உலாவருகிறார். கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடத்தப்படுகிறது.

    திருக்கல்யாண உற்சவம் நடக்கும் 3 நாட்களும் நிகழ்ச்சி நேரத்தில் மற்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×