search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமலை அஞ்சனாத்ரி மலை
    X
    திருமலை அஞ்சனாத்ரி மலை

    திருமலை அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்ததற்கான ஆதாரம்: திருப்பதி தேவஸ்தானம் வெளியீடு

    திருமலை அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்ததற்கான ஆதாரங்களை நாளை (புதன்கிழமை) திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிடுகிறது.
    திருமலை :

    திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்ததாக ராமநவமியான நாளை (புதன்கிழமை) திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆதாரங்களை வெளியிட உள்ளது. எனினும், ஆஞ்சநேயர் பிறந்த இடம் குறித்து பல்வேறு சர்ச்சை எழுந்துள்ளது. அவர், பிறந்த இடம் பற்றி பல்வேறு தரப்பினர் பலவகையான தகவல்கள், கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சிரவை சேர்ந்த வேதப் பண்டிதர் அன்னதானம் சிதம்பர சாஸ்திரி என்பவர் ஆஞ்சநேயர் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் தான் பிறந்தார், எனச் சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் செய்து வந்தார். ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனாதேவி திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் தவம் இருந்து பெற்றெடுத்ததாகக் கூறி உள்ளார்.

    அவர், கடந்த 1972ம் ஆண்டு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு ஆஞ்சநேயர் குறித்த ஆதாரங்களை திரட்டினார். பல புராணங்களை ஆராய்ச்சி செய்து ஆந்திர பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஆஞ்சநேயர் வரலாறு கிரந்தம் என சமஸ்கிருதத்தில் உள்ளது. சிதம்பர சாஸ்திரி சமஸ்கிருதத்தில் இருந்த கால பத்திர கிரந்தத்தை தெலுங்கில் மொழிப்பெயர்த்தார்.

    அதில் ஆஞ்சநேயர் பிறந்த இடம், வரலாறு எனப் பல விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அம்பியில் உள்ள ஆஞ்சநேயர் சிலை உண்மையான சிலை இல்லை, எனச் சிதம்பர சாஸ்திரி வாதம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் ஆஞ்சநேயர் பிறந்த இடம் அதன் முழு விவரங்களை சிதம்பர சாஸ்திரி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் கொடுத்துள்ளார். ஆனால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதை ஏற்றுக் கொள்ளாததால் அவரே புத்தமாக அச்சிட்டு வெளியிட்டு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.

    ஆஞ்சநேயர்

    அதேபோல் ராஜு வெங்கட்ரமணாராவ் என்பவர் ஆஞ்சநேயர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள அம்பியில் பிறந்தார், எனக் கூறி உள்ளார். சுரவரம் பிரதாப்ரெட்டி எழுதிய ராமாயண விசேஷ கிராந்தம் என்னும் புத்தகத்தில் அஞ்சனாத்ரியில் ஆஞ்சநேயரின் வாரிசுகள் இல்லை, தட்சணாபதம் மலையில் வாழும் மலைவாழ் மக்கள் தான் ஆஞ்சநேயரின் வாரிசுகள், எனக் கூறி உள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார், எனத் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. அதேபோல், ஆஞ்சநேயர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தார், எனச் சுவாமி கோபாலனந்தபாபா வாதம் செய்து வருகிறார்.

    1986-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்ட சப்தகிரி இதழில் மலைவாழ் மக்கள் ஆஞ்சநேயர் இனத்தைச் சேர்ந்தவர்கள், என எழுதி உள்ளது. திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார், எனப் புராணம் கூறுகிறது.

    இதுதொடர்பாக தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனியாக ஒரு கமிட்டி அமைத்து ஆலோசனை, ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இதுபற்றி நாளை (புதன்கிழமை) ராம நவமி அன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆதாரங்களை வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.

    அதன் பிறகாவது ஆஞ்சநேயர் பிறந்த இடம் குறித்து தெளிவான நிலை ஏற்படுமா எனப் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆஞ்சநேயர் பிறப்பிடம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதால் குழப்பம் நிலவி வருகிறது.
    Next Story
    ×