என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கோடை திருநாள் தொடக்கம்
Byமாலை மலர்19 April 2021 2:01 AM GMT (Updated: 19 April 2021 2:01 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் நேற்று மாலை தொடங்கி வரும் 21-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
வெளிக்கோடை திருநாளின் முதல் நாளான நேற்று இரவு 7 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த பூச்சாற்று உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வெளிக்கோடை திருநாளை முன்னிட்டு இரவு 8 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. நம்பெருமாள் உள்கோடை திருநாள் வருகிற 22-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
உள்கோடை திருநாளின் போது தினமும் இரவு 7 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு உள்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்வார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளுவார். பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு வீணை வாத்யத்துடன் புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
உள்கோடை திருநாளை முன்னிட்டு இரவு 7.45 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. வருகிற 21-ந் தேதி ஸ்ரீராமநவமியையொட்டி பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணிவரை நம்பெருமாள் சேரகுலவள்ளி தாயார் சேர்த்தி சேவை நடைபெற உள்ளது. வருகிற 27-ந் தேதி சித்ரா பவுணர்மி அன்று கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது.
வெளிக்கோடை திருநாளின் முதல் நாளான நேற்று இரவு 7 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த பூச்சாற்று உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வெளிக்கோடை திருநாளை முன்னிட்டு இரவு 8 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. நம்பெருமாள் உள்கோடை திருநாள் வருகிற 22-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
உள்கோடை திருநாளின் போது தினமும் இரவு 7 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு உள்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்வார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளுவார். பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு வீணை வாத்யத்துடன் புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
உள்கோடை திருநாளை முன்னிட்டு இரவு 7.45 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. வருகிற 21-ந் தேதி ஸ்ரீராமநவமியையொட்டி பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணிவரை நம்பெருமாள் சேரகுலவள்ளி தாயார் சேர்த்தி சேவை நடைபெற உள்ளது. வருகிற 27-ந் தேதி சித்ரா பவுணர்மி அன்று கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X