search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மீனாட்சி அம்மன் கோவில்
    X
    மீனாட்சி அம்மன் கோவில்

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உள் திருவிழாவாக நடத்தப்படலாம் என தெரிகிறது. ஆனால் கோவில் நிர்வாகம் சார்பில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
    உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் சார்பில் செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில் கொரோனா தொற்றின் 2-ம் அலை தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் நடத்த தடைவிதிப்பதாக அரசு அறிவித்தது..

    இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை கலெக்டர் அன்பழகன் தலைமையில் கோவில் அதிகாரிகள், பட்டர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்தாண்டு திருவிழா நடத்தியது போன்று கோவில் வளாகத்திலேயே உள் திருவிழா நடத்தலாமா என ஆலோசிக்கப்பட்டது.

    சித்திரை திருவிழாவின்போது கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் தான் முகூர்த்தகால் நடப்பட்டு திருவிழா ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால் பொற்றாமரைக்குளத்தில் பூஜை செய்து அம்மன் சன்னதி பகுதியில் முகூர்த்தக்கால் நேற்று காலை நடப்பட்டது. இதன் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உள் திருவிழாவாக நடத்தப்படலாம் என தெரிகிறது.

    ஆனால் கோவில் நிர்வாகம் சார்பில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஓரிரு நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்படும் என்று பக்தர்கள் காத்திருக்கிறார்கள்
    Next Story
    ×