என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிரம்மோற்சவ விழா: ஹம்ச, சேஷ வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் உலா
Byமாலை மலர்11 March 2021 6:40 AM GMT (Updated: 11 March 2021 6:40 AM GMT)
மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளில் ஹம்ச, சேஷ வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை ஹம்ச வாகனம் என்ற அன்னப்பறவை வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அனைத்துச் சிவன் கோவில்களில் லிங்க திருமேனியை வால் மற்றும் உடல் பகுதியால் சுற்றியவாறும், தலையை படம் விரித்தப்படி ஆடும் பைந்நாகமாகவும் இருப்பது சேஷம் என்ற நாகம். பிரபஞ்சத்தையே ஆளும் பெருந்தகைக்கு பாதுகாப்பாகவும், அடி தொழுது பூஜிக்கும் காவலனாகவும், வாசம் மிகு வாய்க்காற்றால் தூபமிடுபவன்.
தன் உடலில் உள்ள ரத்தினங்களால் தீபாராதனை செய்பவன். நாக்குகளால் ஆலவட்டம் வீசுபவன். படத்தால் குடைப்பிடிப்பவன். லிங்க திருமேனியை அலங்கரித்து ஆராதனை செய்பவன் சேஷன். கழுத்தில் சுற்றியபடி படமெடுத்து ஆடும் சேஷனை பெருமைப்படுத்தும் விதமாக சிவன் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.
உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து இரவு சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அனைத்துச் சிவன் கோவில்களில் லிங்க திருமேனியை வால் மற்றும் உடல் பகுதியால் சுற்றியவாறும், தலையை படம் விரித்தப்படி ஆடும் பைந்நாகமாகவும் இருப்பது சேஷம் என்ற நாகம். பிரபஞ்சத்தையே ஆளும் பெருந்தகைக்கு பாதுகாப்பாகவும், அடி தொழுது பூஜிக்கும் காவலனாகவும், வாசம் மிகு வாய்க்காற்றால் தூபமிடுபவன்.
தன் உடலில் உள்ள ரத்தினங்களால் தீபாராதனை செய்பவன். நாக்குகளால் ஆலவட்டம் வீசுபவன். படத்தால் குடைப்பிடிப்பவன். லிங்க திருமேனியை அலங்கரித்து ஆராதனை செய்பவன் சேஷன். கழுத்தில் சுற்றியபடி படமெடுத்து ஆடும் சேஷனை பெருமைப்படுத்தும் விதமாக சிவன் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.
உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X