
முன்னதாக பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, சோமசுந்தரமூர்த்தி, ஞானப்பிரசுனாம்பிைக தாயார், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து பல்லக்கில் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றுக்குக் கொண்டு வரப்பட்டனர்.
அங்கு, வேதப்பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பிரதான அர்ச்சகர்கள் சங்கல்ப பூஜை செய்தனர். கலசத்தை ஏற்பாடு செய்து, அதில் திரிசூலத்தை அமர்த்தி உமாதேவி சமேத சந்திரசேகரருக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். சத்வோமுக்தி உற்சவ சிறப்பை வேதப் பண்டிதர்கள் பக்தர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இதையடுத்து உமாதேவி சமேத சந்திரசேகரரையும், திரிசூலத்தையும் அர்ச்சகர்கள் ஆற்றுக்குள் எடுத்துச் சென்றனர். உற்சவர்கள் முன்னிலையில் திரிசூலத்தை சொர்ணமுகி ஆற்றின் புனிதநீரில் 3 முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர். பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கொரோனா பரவலால் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.