என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்24 Feb 2021 9:39 AM GMT (Updated: 24 Feb 2021 9:39 AM GMT)
பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்து வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக விளங்கும் மாரியம்மன் கோவில் பழனி நகரின் கிழக்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசித்திருவிழா கடந்த 12-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் 12-ம் நாளான நேற்று இரவு 7 மணியளவில் மாரியம்மன் சன்னதியில் 5 கலசங்கள் வைத்து புண்ணியாவாஜனம், விநாயகர் பூஜை, சிறப்பு யாகம், காப்புகட்டுதல் நடந்தது.
பின்னர் கொடிப்படம் கோவிலை வலம் வந்து கொடிமரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்து வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியை காண அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் மாரியம்மன் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும், அக்னி சட்டி எடுத்து வந்து கம்பத்தில் வைத்தலும், தீபாராதனையும் நடந்தது.
பின்னர் மாரியம்மன் பெரிய தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு அடிவாரம் அழகு நாச்சியம்மன் கோவிலிலும், குமாரசமுத்திரம் அழகு நாச்சியம்மன் கோவிலிலும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர் இரவில் சிம்ம வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.
பின்னர் கொடிப்படம் கோவிலை வலம் வந்து கொடிமரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்து வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியை காண அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் மாரியம்மன் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும், அக்னி சட்டி எடுத்து வந்து கம்பத்தில் வைத்தலும், தீபாராதனையும் நடந்தது.
பின்னர் மாரியம்மன் பெரிய தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு அடிவாரம் அழகு நாச்சியம்மன் கோவிலிலும், குமாரசமுத்திரம் அழகு நாச்சியம்மன் கோவிலிலும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர் இரவில் சிம்ம வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X