என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சபரிமலை கோவிலில் ஆறாட்டு திருவிழா மார்ச் 19-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்18 Feb 2021 5:43 AM GMT (Updated: 18 Feb 2021 5:43 AM GMT)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்தர ஆறாட்டு திருவிழா மார்ச் 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 12-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 13-ந்தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து ஐயப்பன் கோவில் நடை நேற்று அடைக்கப்பட்டது.
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 15-ந்தேதி முதல் மாத பூஜை 5 நாட்கள் நடைபெறும். அதைத்தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்தர ஆறாட்டு திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது.
அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறுகிறது. 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடக்கிறது.
28-ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு நடைபெறுகிறது. அன்று மாலை கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 15-ந்தேதி முதல் மாத பூஜை 5 நாட்கள் நடைபெறும். அதைத்தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்தர ஆறாட்டு திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது.
அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறுகிறது. 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடக்கிறது.
28-ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு நடைபெறுகிறது. அன்று மாலை கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X