search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காளஹஸ்தி கோவில்
    X
    காளஹஸ்தி கோவில்

    காளஹஸ்தி கோவிலில் கொரோனா விதிமுறைகள்படி மகா சிவராத்திரி விழா

    பஞ்சபூத சிவத் தலங்களில் வாயு தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோவிலில் கொரோனா நிபந்தனைகளுக்கு உள்பட்டு அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
    பஞ்சபூத சிவத் தலங்களில் வாயு தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது.

    மார்ச் 6-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து மாவட்ட அதிகாரிகள், திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடப்ப நாயுடு, கோவில் அதிகாரிகள் கலந்துரையாடல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டம் முடிந்ததும் கலெக்டர் ஹரிநாராயண் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தை காண அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். காலை, இரவு நடக்கும் வாகன சேவையில் கலந்து கொள்வதுடன் கிரிவலம், திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட அனைத்திலும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

    எனவே கொரோனா நிபந்தனைகளுக்கு உள்பட்டு அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    கோவிலில் தரிசன வரிசைகள் உருவாக்கப்பட்டு அங்கு குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும். பிரம்மோற்சவ நாள்களின் போது பல்வேறு மாநிலங்களில் இருந்து ராகு-கேது பரிகார பூஜைகள் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    காளஹஸ்தி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும் என்றார்.
    Next Story
    ×