search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா பூஜை
    X
    தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா பூஜை

    தென்னம்பாக்கத்தில் அழகுமுத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

    தென்னம்பாக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) அழகுமுத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் எம்.சி. சம்பத் கலந்து கொள்ள உள்ளார்.
    கடலூர் தூக்கணாம்பாக்கம் அடுத்த தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அழகுமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அழகர் சித்தர், ஜலசமாதி அடைந்தார். இந்த நிலையில் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலையில் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று தற்போது புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது. மேலும் அமைச்சர் எம்.சி. சம்பத் ஏற்பாட்டின் பேரில் பெரிய அளவிலான அழகர் சித்தர் ஜலசமாதி தியான மண்டபம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது.

    இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று அங்குரார்ப்பணம், முதல் கால யாக பூஜை நடந்தது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத், மகேஷ், ஜோதி, எம்.சி.சம்பந்தம், முத்து, குமரப்பன், சேகர், ஜெயபால், ராஜூ, சுந்தர ராகவன், ரமேஷ், ராமகிருஷ்ணன், மருதமலை, அருள்குமார் மற்றும் விழாக்குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை, பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று ளை(திங்கட்கிழமை) 4-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. பின்னர் காலை 6 மணியளவில் கிராமத தேவதைகள் ஆலய கும்பாபிஷேகம், 9.45 மணியளவில் அழகு முத்து அய்யனார் மற்றும் ஜலசித்தர் சன்னதியில் கும்பாபிஷேகமும், காலை 10.15 மணிக்கு மூலஸ்தான மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் அழகர், பூரணி, பொற்கலை மற்றும் அர்ச்சுனன், திரவுபதி அம்மன் திருக்கல்யாண உற்சவமும், நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதல் மண்டல பூஜையும் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மகாதேவி, தென்னம்பாக்கம், மூர்த்திக்குப்பம் கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×