search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை
    X
    திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை

    திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று முருகனை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். நெல்லை-தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடந்த ஒரு மாதமாக முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.

    இந்த பக்தர்கள் தங்கள் ஊரில் இருந்து குழுவாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். தங்கள் ஊரில் இருந்து முருகன் படத்தை சப்பரத்தில் அலங்காரம் செய்து லோடு ஆட்டோ, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களில் வைத்துக் கொண்டு வருகின்றனர். மேலும் சில பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஆடிப்பாடி செல்கின்றனர். நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த சுடலை உள்ளிட்ட 3 பேர் நெல்லை தாமிரபரணி ஆற்றில் உள்ள ஒத்தப்பனை சுடலை மாடசாமி கோவிலில் வைத்து 6 அடி நீளத்துக்கு வேல் குத்தி திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

    நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முருக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். சில பக்தர்கள் 15 அடி நீளமுள்ள வேல் குத்தி சென்றனர்.

    நெல்லை மாநகரத்தில் உள்ள சாலைகளில் எங்கு பார்த்தாலும் முருக பக்தர்கள் கூட்டத்தை பார்க்கவும், பக்தி கோஷத்தை கேட்கவும் முடிகிறது.

    நெல்லை சந்திப்பு மேம்பாலத்தை கடந்து செல்லும் பக்தர்கள் சாலை குமாரசாமி கோவில் இருக்கும் பகுதியில் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து செல்கிறார்கள்.

    நெல்லை வழியாக செல்லும் முருக பக்தர்கள் நெல்லை தாமிரபரணி ஆற்றில் காலையிலும், மாலையிலும் புனித நீராடினார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மதிய நேரங்களில் இந்த பக்தர்கள் கலெக்டர் அலுவலக வெளிப்பகுதியில் தங்கி சமையல் செய்து சாப்பிட்டு செல்கிறார்கள். இதனால் கலெக்டர் அலுவலகம் உள்ள பகுதி முழுவதும் முருக பக்தர்களாக காட்சி அளிக்கின்றனர்.
    Next Story
    ×