என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
Byமாலை மலர்25 Jan 2021 6:08 AM GMT (Updated: 25 Jan 2021 6:08 AM GMT)
சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழாவையொட்டி கடந்த 15-ந் தேதி தை மாத முதல் வெள்ளி அன்று கொடியேற்றப்பட்டது. இதனையடுத்து 22-ந் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேர் திருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் புற்றடி மாரியம்மன் எழுந்தருளினார். இதனையடுத்து கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க நான்கு வீதிகளில் தேர் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்பட ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழாவையொட்டி கடந்த 15-ந் தேதி தை மாத முதல் வெள்ளி அன்று கொடியேற்றப்பட்டது. இதனையடுத்து 22-ந் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேர் திருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் புற்றடி மாரியம்மன் எழுந்தருளினார். இதனையடுத்து கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க நான்கு வீதிகளில் தேர் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்பட ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X