என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா துவங்கியது
Byமாலை மலர்15 Jan 2021 7:13 AM GMT (Updated: 15 Jan 2021 7:13 AM GMT)
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவீதி வலம் வருதலும் நடைபெறுகிறது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் சாமி தலை மைப்பதி உள்ளது. இங்கு வருடந்தோரும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங் களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட தை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன் னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பும், தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும் அதிகாலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரித்தலும் கொடிப் பட்டம் பள்ளியறை வலம் வருதலும் நடை பெற்றது. பின்னர் அய்யா வழி பக்தர்களின் அய்யா சிவ சிவா அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் திருக்கொடியேற்றம் நடைபெற்றது.
பால.பிரஜாபதி அடிகளார் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு இனிமம் வழங்குதலும், வாகன பவனியும் நடை பெற்றது. காலை 10 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவீதி வலம் வருதலும் நடைபெறுகிறது.
விழாவின் இரண்டாம் நாளான நாளை காலைமாலை பணிவிடையும் இரவு அய்யா சக்கர வாகனத்தில் பவனி வருதலும் நடைபெறுகிறது. விழா தொடர்ந்து பதினொரு நாட்கள் நடைபெறுகிறது. வருகிற 22-ம் தேதி வெள்ளிக்கிழமை எட்டாம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை நான்கு மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாக னத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும் பக்தர்களின் சுருள் ஏற்பு நிகழ்ச்சியில் நடைபெறுகிறது.
வருகிற 25ம் தேதி 11ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் காலைமாலை பணிவிடையும் பகலில் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X