என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கியது
Byமாலை மலர்11 Jan 2021 9:02 AM GMT (Updated: 11 Jan 2021 9:02 AM GMT)
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந்தேதி நடக்கிறது. அன்றையதினம் மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதற்கான பிரதான சடங்குகள் இன்று தொடங்கியது.
திருவனந்தபுரம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்தமாதம் (டிசம்பர்) 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மறுநாள்(31-ந்தேதி) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
கொரோனா கட்டுப்பாடு களின்படி ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந்தேதி நடக்கிறது. அன்றையதினம் மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு உள்ளன.
மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் இன்று தொடங்கியது. பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங் காடு சங்கங்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. அதில் கொரோனா கட்டுப்பாடுகளின்படி 50பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல் மகரவிளக்கு பூஜை தினமான 14-ந்தேதி மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவா பரணங்கள் பந்தளம் அரண் மனையில் இருந்து இன்று புறப்பட்டது. திருவாபரண பெட்டி ஊர்வலம் 14-ந்தேதி மாலை 5:30 மணிக்கு சரங் குத்திக்கு வந்து சேரும்.
அங்கு திருவாபரண பெட்டியை தேவசம்போர்டு மந்திரி, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற் கிறார்கள். பின்பு அவை, ஐயப்ப சுவாமி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு தந்திரி மற்றும் மேல்சாந்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதனை பெற்றுக்கொள்ளும் அவர்கள், ஐயப்பனுக்கு திருவாபரணங்களை அணி விக்கின்றனர். அதன்பிறகு ஐயப்பனுக்கு தீபாராதனை நடக்கிறது.
தீபாராதனை முடிந்ததும் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தருவார். அய்யப் பனுக்கு வருகிற 18-ந்தேதி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். 19-ந்தேதியே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை முடிந்து 20-ந்தேதி காலை 6:30மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X